ராஜமௌலியால் வாழ்க்கையை இழந்ததாக நீண்டகால நண்பர் பரபரப்புக் குற்றச்சாட்டு

21 hours ago
ARTICLE AD BOX
ராஜமௌலியால் வாழ்க்கையை இழந்ததாக நீண்டகால நண்பர் பரபரப்புக் குற்றச்சாட்டு

ராஜமௌலியால் வாழ்க்கை இழப்பு; நீண்டகால நண்பர் குற்றச்சாட்டால் பரபரப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 27, 2025
07:09 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி மீது ஸ்ரீனிவாச ராவ் என்ற நபர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து அவர் சர்ச்சையின் மையத்தில் உள்ளார்.

34 ஆண்டுகளாக ராஜமௌலியின் நெருங்கிய நண்பராக இருந்ததாக தெரிவித்துள்ள ஸ்ரீனிவாச ராவ், ஒரே நபர் மீது இருவரும் கொண்டிருந்த பரஸ்பர பாசம் காரணமாக இருந்த நட்பு மோசமடைந்ததாக குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ செய்தி மற்றும் ஒரு கடிதத்தில், ராஜமௌலி தனது வாழ்க்கையை அழித்து தற்கொலை பற்றி யோசிக்கத் தூண்டியதாக ஸ்ரீனிவாச ராவ் குற்றம் சாட்டினார்.

"தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நான் 55 வயதிலும் தனிமையில் இருப்பதற்கு ராஜமௌலிதான் காரணம்" என்று அவர் கூறினார்.

நட்பு

நட்புக்காக உறவைக் கைவிட்டதாக சோகம்

தங்கள் நட்பிற்காக தன்னுடைய உறவில் இருந்து விலகியதாகவும், பின்னர் ராஜமௌலியால் துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

யமடோங்கா (2007) படத்திற்குப் பிறகு அவர்களின் ஒத்துழைப்பு முடிவுக்கு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து ராஜமௌலி அவரை ஒதுக்கிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

ராஜமௌலி மீது பொய் கண்டறியும் சோதனைக்கு ஸ்ரீனிவாச ராவ் அழைப்பு விடுத்தபோதும், தொழில்துறை போட்டியாளர்களுக்கு எதிராக சூனியம் யன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியபோதும் குற்றச்சாட்டுகள் அசாதாரண திருப்பத்தை எடுத்தன.

தனது கூற்றுக்களை விசாரித்து நீதி வழங்குமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார். ராஜமௌலியும் அவரது குழுவினரும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை.

பெரிய பட்ஜெட் காட்சிகளுக்குப் பெயர் பெற்ற இயக்குனர் ராஜமௌலி, தற்போது மகேஷ் பாபு நடிக்கும் SSMB29 படத்தில் பணியாற்றி வருகிறார்.

Read Entire Article