ARTICLE AD BOX
உக்ரைனில் இருந்து ரஷியாவை உடனடியாக வெளியேற்றும் தீர்மானத்திற்கு ஐ.நா. ஒப்புதல் வழங்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து நேற்றுடன் (பிப். 24) மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இருந்தாலும் இந்தப் போா் எப்போது முடியும், எப்படி முடியும் என்பது புரியாத புதிராகவே இன்னும் தொடா்கிறது.
இந்த நிலையில், உக்ரைனில் இருந்து ரஷியா உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு சில ஐரோப்பிய சட்ட திருத்தங்களுடன் ஐ.நா. சபையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷியப் போர் தொடங்கி மூன்றாண்டுகள் கடந்த நிலையில் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 93 நாடுகளும், எதிராக 18 நாடுகளும் வாக்களித்துள்ளன. வாக்களிப்பில் பங்குபெறாமல் 65 நாடுகள் புறக்கணித்துள்ளன.
மேலும், உக்ரைனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் 'உக்ரைனில் ஒரு விரிவான, உடனடி நீடித்த அமைதியை நிலைநிறுத்துதல்' என்ற வரைவுத் தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.