ARTICLE AD BOX
நெல்லை: ரயில் பாதை சீரமைப்பு பணி காரணமாக நெல்லை – திருச்செந்தூர் – நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை – திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் திருச்செந்தூர் – நெல்லை இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரத்து என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
The post ரயில் பாதை சீரமைப்பு பணி காரணமாக நெல்லை – திருச்செந்தூர் இடையே 25 நாட்கள் ரயில் சேவை ரத்து appeared first on Dinakaran.