மோடியிடம் போகிறேன், ராஜினாமா செய்கிறேன்.! உ.பி தலித் பெண் மரணத்தில் கதறி அழுத அயோத்தி எம்.பி

2 hours ago
ARTICLE AD BOX
<p>உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள &nbsp;கிராமத்தின் அருகே ஒரு பாழடைந்த கால்வாயில், 22 வயது தலித் பெண் இறந்த நிலையில் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் இறந்த நிலையில் இருப்பதை , அவரது மைத்துநர், நேற்றைய தினம் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.</p> <h2><strong>உடல் முழுவதும் காயங்கள்:</strong></h2> <p>இச்சம்பவம் குறித்து, பெண்ணின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், &ldquo; அவரை வியாழக்கிழமை இரவு முதலே காணவில்லை. நேற்றைய தினம் காலையில் கிராமத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் &nbsp;இறந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அப்போது, அவரது கை-கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டிருந்ததாகவும், உடலில் பல ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்ததாகவும் ,அவரது கண்கள் காணவில்லை என்றும், உடலில் ஆழமான காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் இருந்ததாகவும் குடும்பத்தினர் &nbsp;கூறியுள்ளனர். &nbsp;</p> <h2><strong>காவல்துறை மீது குற்றச்சாட்டு:</strong></h2> <p>பெண்ணை காணவில்லை என்று புகார் அளித்த பிறகும் அதிகாரிகள் தீவிரமாகத் தேடவில்லை என்றும், காவல்துறை சரியாக செயல்படவில்லை என்றும் பெண்ணின் குடும்பத்தினர், குற்றம் சாட்டியுள்ளனர்.</p> <p>இதுகுறித்து, அப்பகுதி வட்ட அதிகாரிக் தெரிவிக்கையில். &ldquo; பிரேத பரிசோதனை அறிக்கை, அடுத்தகட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும் என்றும், பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன், அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம் என்றும் &nbsp;கூறினார்.</p> <h2><strong>&rdquo;பிரதமர் மோடியிடம் போகிறேன்&rdquo;</strong></h2> <p>இந்நிலையில் அயோத்தியில் உள்ள பைசாபாத் மக்களவைத் தொகுதியின் எம்பியான பிரசாத், செய்தியாளர்கள் சண்நிப்பின் போது, கண்ணீர் விட்டு அழுதார். அவர் தெரிவித்ததாவது "இந்த கொடூரமான குற்றங்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன. 3 நாட்களாக காணாமல் போன ஒரு தலித் குடும்பத்தின் மகளின் உடல் அயோத்தியில் உள்ள சஹானாவன் கிராம சபையின் சர்தார் படேல் வார்டில் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அவரின், இரண்டு கண்களும் பிடுங்கப்பட்டிருக்கின்றன, இந்த அரசால், நீதி வழங்க முடியாது.&nbsp;</p> <p>&nbsp;</p> <blockquote class="twitter-tweet" data-media-max-width="560"> <p dir="ltr" lang="hi">यह जघन्य अपराध बेहद दुःखद हैं।<br /><br />अयोध्या के ग्रामसभा सहनवां, सरदार पटेल वार्ड में 3 दिन से गायब दलित परिवार की बेटी का शव निर्वस्त्र अवस्था में मिला है, उसकी दोनों आँखें फोड़ दी गई हैं उसके साथ अमानवीय व्यवहार हुआ है।<br /><br />यह सरकार इंसाफ नही कर सकती। <a href="https://t.co/aSvI3N74Kl">pic.twitter.com/aSvI3N74Kl</a></p> &mdash; Awadhesh Prasad (@Awadheshprasad_) <a href="https://twitter.com/Awadheshprasad_/status/1885928008529363144?ref_src=twsrc%5Etfw">February 2, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>"என்னை டெல்லி, நாடாளுமன்றத்திற்குச் செல்ல விடுங்கள். இந்த விஷயத்தை பிரதமர் மோடியின் முன் வைக்கிறேன், எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், நான் ராஜினாமா செய்வேன்," என்று தெரிவித்து கண்ணீர்விட்டு அழும் காட்சியை பார்க்க முடிகிறது.</p> <p>Also Read: <a title="பட்ஜெட்டில் ரூ.14.8 லட்சம் கோடி கடன் வாங்கி, 12 லட்சம் கோடி வட்டியா.! ஷாக்கான மக்கள்" href="https://tamil.abplive.com/business/budget/union-budget-2025-26-govt-plan-to-borrow-14-8-lakh-crore-and-12-lakh-crore-as-interest-rate-people-reaction-in-tamil-214534" target="_self">பட்ஜெட்டில் ரூ.14.8 லட்சம் கோடி கடன் வாங்கி, 12 லட்சம் கோடி வட்டியா.! ஷாக்கான மக்கள்</a></p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/india/why-padma-awards-the-country-s-highest-civilian-awards-are-given-and-to-whom-214218" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article