ARTICLE AD BOX
முன்னர் இருந்த காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மீது மக்களுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால், இன்றைய இளம் தலைமுறையினருக்கு கொரியா மீது ஒரு ஈர்ப்பு இருப்பதை சமூக ஊடகங்கள் வாயிலாக நம்மால் உணர முடிகிறது.
அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்களில் கொரியன் படங்கள், வெப் சிரீஸ்கள் தொடங்கி, பி.டி.எஸ் குழுவினர் மீது கொண்ட பற்று என பல வடிவங்களாக கொரியாவின் மீது இளைஞர்களுக்கு இருக்கும் ஒரு அன்பு நமக்கு தெரிகிறது.
அந்த வரிசையில் கொரியர்களின் சரும பராமரிப்பு முறையும் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதற்கு காரணம் அவர்களது கண்ணாடி போன்ற சருமத்தின் பளபளப்பு தான். அவர்களின் மரபியலும் இதற்கு முக்கிய காரணம் என்றாலும், ஸ்கின் கேரில் கொரியர்கள் தனி கவனம் செலுத்துகின்றனர்.
இதற்காக பல அழகு சாதன பொருட்களும் சந்தையில் தற்போது கிடைக்கிறது. ஆனால், இவற்றின் நம்பகத்தன்மை பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும், இதில் கலந்திருக்கும் இரசாயனங்கள் ஏதேனும் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமோ என்ற தயக்கமும் பெரும்பாலானோரிடம் இருக்கிறது.
அதன்படி, நம் வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்களை வைத்து கொரியன் ஸ்பெஷல் ஃபேஸ்பேக்கை நம்மால் தயாரித்துக் கொள்ள முடியும். இதற்காக நம் முகத்திற்கு தேவையான அளவு அரிசி மாவு மற்றும் சிறிதளவு பால் ஆகிய இரண்டையும் சேர்த்து பசை பதத்திற்கு நன்றாக கலக்க வேண்டும்.
இப்படி செய்தால் கொரியன் ஃபேஸ்பேக் தயாராகி விடும். இதனை நம் முகத்தில் தடவி விட்டு, சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் கழுவி விடலாம். இந்த பேஸ்பேக்கை பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கும். மேலும், வெயில் நேரத்தில் முகம் வறண்டு போவதை தடுக்கும் ஆற்றலும் இந்த ஃபேஸ்பேக்கில் இருக்கிறது.
எனவே, கொரியன் சரும பராமரிப்பு முறையை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த எளிமையான ஃபேஸ்பேக்கை பரிசீலிக்கலாம்.
நன்றி - KN SMILEY Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.