ARTICLE AD BOX
Published : 19 Mar 2025 01:43 PM
Last Updated : 19 Mar 2025 01:43 PM
“மீண்டும் வருக! பூமி உங்களை மிஸ் செய்தது” - சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: விண்வெளி ஆய்வை முடித்துக்கொண்டு பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்களை பூமி மிஸ் செய்தது என நெகிழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மீண்டும் வருக Crew9! பூமி உங்களை மிஸ் செய்தது. அவர்களின் மனஉறுதி, தைரியம் மற்றும் எல்லையற்ற மனித மனப்பான்மைக்கு ஒரு சோதனை இருந்து வருகிறது. சுனிதா வில்லியம்ஸும் #Crew9 விண்வெளி வீரர்களும் உண்மையில் விடாமுயற்சி என்றால் என்ன என்பதை நமக்கு மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளனர். அறியப்படாத பரந்த உலகில் அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு என்றென்றும் கோடிக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கும்.
விண்வெளி ஆய்வு என்பது மனித ஆற்றலின் வரம்புகளைத் தாண்டிச் செல்வது, கனவு காணத் துணிவது, அந்தக் கனவுகளை நிஜமாக மாற்றும் தைரியத்தைக் கொண்டிருப்பது பற்றியது. தனது வாழ்க்கை முழுவதும் இந்த உணர்வை சுனிதா வில்லியம்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
விண்வெளி வீரர்களின் பாதுகாப்பான வருகையை உறுதிசெய்ய அயராது உழைத்த அனைவரையும் நினைத்து நம்பமுடியாத அளவிற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். துல்லியம் ஆர்வத்தையும் தொழில்நுட்பம் விடாமுயற்சியையும் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, பிரதமர் நரேந்திர மோடி சுனிதா வில்லியம்ஸுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், ”இந்திய மக்களின் வாழ்த்துகளை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று ஒரு நிகழ்ச்சியில், பிரபல விண்வெளி வீரர் மைக் மாசிமினோவைச் சந்தித்தேன். எங்கள் உரையாடலின்போது, உங்கள் பெயர் வந்தது. உங்களைப் பற்றியும் உங்கள் பணியைப் பற்றியும் நாங்கள் எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்பதைப் பற்றி விவாதித்தோம். இந்த உரையாடலைத் தொடர்ந்து, உங்களுக்கு என்னால் கடிதம் எழுதாமல் இருக்க முடியவில்லை.
நான் அமெரிக்காவுக்கு வருகை தந்தபோது அதிபரிடம் உங்கள் நலம் குறித்து விசாரித்தேன். 140 கோடி இந்தியர்கள் எப்போதும் உங்கள் சாதனைகளில் பெருமிதம் கொண்டுள்ளனர். சமீபத்திய முன்னேற்றங்கள் உங்கள் ஊக்கமளிக்கும் மன உறுதியையும் விடாமுயற்சியையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன. நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் உங்கள் பணி வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
போனி பாண்டியா (சுனிதாவின் தாய்) உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். மேலும் மறைந்த தீபக் பாண்டியாவின் (சுனிதாவின் தந்தை) ஆசிர்வாதங்களும் உங்களுடன் இருக்கும் என்று நான் நம்புகிறேன். 2016-ஆம் ஆண்டு நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, உங்களுடன் அவரைச் சந்தித்ததை நான் மிகவும் நினைவில் கொள்கிறேன்.
நீங்கள் திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்ப்பதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பது மகிழ்ச்சியாக இருக்கும். மைக்கேல் வில்லியம்ஸுக்கு (சுனிதாவின் கணவர்) எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும், பாரி வில்மோர் பாதுகாப்பாக திரும்ப வாழ்த்துகள்" என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- தமிழக மீனவர் பிரச்சினை: வைகோ குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்
- மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
- 100 நாள் வேலை திட்டத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்தும் பாஜக அரசு: சோனியா காந்தி குற்றச்சாட்டு
- அவுரங்கசீப்பை பரசுராமர், கோட்சேவுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்த அரசியல் தலைவர்கள்: உ.பி., ம.பி.யில் சர்ச்சை