மிளகு பொங்கல்: சுட சுட மிளகு பொங்கல் செய்ய ரெடியா? சூப்பாரான பிரேக்பாஸ்ட் இது தான்!

2 days ago
ARTICLE AD BOX

இதனை குறைக்க நாமே நமது வீட்டில் சுவையான சமையலை செய்வது தான் ஒரு வழி. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த தலைமுறையினர் வழக்கமாக நாம் வீடுகளில் செய்யும் சமையலையே தெரியாமல் வைத்திருக்கின்றனர். நாம் காலை உணவு என்றாலே நமது வீட்டில் இட்லி, தோசை, பொங்கல் எனவே இருக்கும். ஆனால் சிலருக்கு பொங்கல் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கலாம் .அதனை குறைக்கவே, நெய் சேர்த்து சுவையான மிளகு பொங்கல் வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை இங்கே கொடுத்துள்ளோம். இதனை நீங்களும் ட்ரை செய்து பார்த்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருள்கள்

2 கப் பச்சரிசி

ஒரு கப் பயத்தம் பருப்பு

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

ஒரு டீஸ்பூன் மிளகு

சீரகம் - ஒரு மேசைக்கரண்டி

பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

முந்திரி - 12

இஞ்சி - அரை அங்குலத் துண்டு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

நெய் -50 கிராம்

செய்முறை 

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் 6 கப் தண்ணீர் ஊற்றி அதிக தீயில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றாமல் சூடாக்கி அதில் பயத்தம் பருப்பு போட்டு வாசனை வர ஒரு நிமிடம் வறுக்கவும். பிறகு அதனுடன் அரிசியை போட்டு மேலும் ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அரிசி, பருப்பை தண்ணீர் ஊற்றி ஒரு முறை களைந்து விட்டு, குக்கரில் கொதிக்கும் தண்ணீரில் போடவும். நன்கு கிளறி விட்டு வேக விடவும். மீண்டு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும் அதில் முந்திரி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு வறுத்துக் கொள்ளவும். குக்கரில் வைத்திருந்த அரிசி வெந்ததும் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு போடவும். அத்துடன் வறுத்து வைத்துள்ளவற்றையும் போட்டு நன்கு கிளறி விடவும். மேலும் அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, வெய்ட் போட்டு வேக வைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். சுமார் 5 நிமிடம் கழித்து ஆவி அடங்கியவுடன் திறந்து, மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி கிளறி விடவும். இப்போது சுவையான மிளகு பொங்கல் தயார்.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, 2019 ஆம் ஆண்டு முதல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் ஆங்கில இலக்கியத் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேல் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஆகும். இவர் கடந்த 2024 செப்டம்பர் மாதம் முதல் தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் தேசம், லைப்ஸ்டைல், சினிமா மற்றும் உலகம் தொடர்பான செய்திகளில் தனது பங்களிப்பை அளித்து வருக்கிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
Read Entire Article