ARTICLE AD BOX
சென்னை: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை என்ற செய்தி தவறானது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்சார வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை இணை ஆணையர் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான செலவினங்களில் உரிய வருமான வரி பிடித்தம் (TDS) தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை. ஆகவே தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் எவ்வித வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை. வருமான வரி சோதனை என்ற செய்தி தவறானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மின்வாரிய தலைமை அலுவலகம் விளக்கம் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடக்கவில்லை appeared first on Dinakaran.