மின் கம்பத்தில் மோதியதில் தீப்பிடித்த இருசக்கர வாகனம்: 2 வட மாநில இளைஞர்கள் காயம்

4 hours ago
ARTICLE AD BOX

சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி இருசக்கர வாகனம் தீப்பிடித்த சம்பவத்தில் இரு வடமாநில இளைஞர்கள் காயமடைந்தனர்.

கோவை மாவட்டம், சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் இருந்து கலங்கல் செல்லும் சாலையில் குடிபோதையில் வட மாநில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளனர்.

ஒரு வளைவில் திரும்பும் போது சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியது.

இதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து உள்ளது. இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த வட மாநில இளைஞர்கள் 80 சதவீத தீக்காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

காயம் குணமாகியது: சன்ரைசர்ஸ் அணியில் இணையும் நிதீஷ் ரெட்டி!

உடனே அவ்விடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் கார்பன் டை ஆக்சைடு புகையை செலுத்தி தீயை அணைத்தனர்.

மீட்கப்பட்ட இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Entire Article