ARTICLE AD BOX
Published : 22 Mar 2025 06:15 AM
Last Updated : 22 Mar 2025 06:15 AM
மார்ச் 25-ல் இஃப்தார்: கூட்டணி கட்சிகளுக்கு பாஜக அழைப்பு

சென்னை: தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள பைசல் மஹாலில் மார்ச் 24-ம் தேதி நடக்கிறது. இதற்காக, கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக அழைப்பு விடுத்து வருகிறது.
அந்த வகையில், பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தலைமையில், பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், சிறுபான்மை அணி மாநிலத் தலைவர் டெய்சி தங்கையா, மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு நேரில் அழைப்பு விடுத்தனர்.
தொடர்ந்து, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை