ARTICLE AD BOX
மாசி மகத்தையொட்டி வரும் மார்ச் 13 மற்றும் மார்ச் 14ஆம் தேதிகளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வரும் மார்ச் 13ஆம் தேதி அன்று காரைக்கால் மாவட்டத்திற்கும், மார்ச் 14ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அன்றைய தினம் தேர்வுகள் இருந்தால் வழக்கம் போல நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆண்டுதோறும் மாசி மகம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வைத்திக்குப்பம் கடற்கரையில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாவில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான கோயில்களை சேர்ந்த உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிப்பர்.
ஒரே இடத்தில் பல்வேறு கோயில்களின் உற்சவர்களும் எழுந்தருள்வதால் புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாசி மகத்திற்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
வைத்திக்குப்பம் கடற்கரையில் நடக்கும் மாசிமகம் தீர்த்தவாரி விழாவையொட்டி பக்கதர்கள் வசதி மற்றும் பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகளை அரசு நிர்வகம் செய்து வருகிறது. திருட்டு, மோதல் போன்ற அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
