மறியல் போராட்டம் அல்ல: மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்; ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

3 hours ago
ARTICLE AD BOX

நாளை மறியல் அல்ல, தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜக்டோ ஜியோ அமைப்பின், மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியுள்ளார்.

Advertisment

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கடந்த தேர்தலில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தி.மு.க அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, நாளை (பிப்.25) ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்து. இதனைத் தொடர்ந்து,  ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு, இந்த குழுவினருடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில், அரசின் சார்பில்,போராட்டத்தை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்குமாறு கூரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாளை (பிப்ரவரி 25) நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் மறியல் போராட்டம் நடைபெறாது என்றும், அதற்கு பதிலாக, தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisement

இது குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினோம். அரசு எங்களின் கோரிக்கைகளை நிராகரிக்கவில்லை. 4 வாரங்கள் அவகாசம் கேட்டுள்ளனர். முதல்வர் எங்களது கோரிக்கைகள் குறித்து அழுத்தம் கொடுத்திருப்பதாக அமைச்சர்கள் குழுவினர் கூறியள்ளனர். எங்கள் கோரிக்கை குறித்து தீர்வு கிடைக்காத பட்சத்தில் வேறு வழியின்றி இந்த போராட்டக்களத்துக்கு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது.

போராட்டத்தின் மூலம் எங்கள் ஊழியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறோம். நாளை(பிப்.25) தற்செயல் விடுப்பு எடுத்து மறியல் போராட்டமாக இல்லாமல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமாக நடக்க முடிவு எடுத்துள்ளோம். இதனைத் தொடர்ந்து நாளை மாலை ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார். 

Read Entire Article