ARTICLE AD BOX
மரணத்தை தள்ளி போடும் நெல்லிக்கனி..!!
இதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.
தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது வேகத்திற்கு புத்துணர்ச்சியை கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும். தொற்று நோய்கள் எதுவும் தொற்றாது. இருதயம் சிறுநீரகம் பலப்படும் ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும் அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.
நெல்லிசாருடன் பாகற்காய் சாரை சேர்த்து சாப்பிட்டால் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியை தடுக்கும். ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி ஒரு ஸ்பூன் நாவல் பழம் ஒரு ஸ்பூன் பாகற்காய் பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து பின் குளிர வைத்து தலைக்கு தடவி வந்தால் தலைமுடி பளபளப்பாகவும் கருமையாகவும் அடர்த்தியாகவும் இருக்க உதவும். நெல்லி சாறு மற்றும் தேனையும் சேர்த்து கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம் கிடைக்கும் .குடலுக்கும் பலம் கிடைக்கும். மூளை, இருதயம் கல்லீரல் முதலில் உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும் இவ்வாறான வழிகளில் நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் மரணத்தை கூட தள்ளிப் போடலாம்.