ARTICLE AD BOX
அரசு இயந்திர கலப்பை பணிமனையில் டிராக்டர் ஆப்ரேட்டர் பயிற்சிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது;
மதுரை மாவட்டம் நெல்லியேந்தல்பட்டியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை இணைந்து டிராக்டர் ஆபரேட்டர் பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளது.
பயிற்சி விவரங்கள்
மொத்தம் 3 பயிற்சி கட்டங்கள் (2024-25 கல்வியாண்டு) நடைபெறும். ஒவ்வொரு பயிற்சி கட்டமும் 22 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு பயிற்சிக்கும் 25 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
பயிற்சி கால அட்டவணை
முதல் கட்டம்: 11.12.2024 - 11.01.2025
இரண்டாவது கட்டம்: 27.01.2025 - 28.02.2025
மூன்றாவது கட்டம்: மார்ச் 2025 முதல் வாரம்
தகுதிகள்
இந்தப் பயிற்சிக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
கல்வித் தகுதி சான்று
புகைப்படம்
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட ஆவணங்களுடன் நெல்லியேந்தல்பட்டி அருகிலுள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனைக்கு நேரில் சென்று பதிவு செய்யலாம்.
கூடுதல் தகவலுக்கு: 9443677046, 9944344066, 8428981436
பயிற்சி முடித்த பின்னர் ஓட்டுநர் உரிமம் பெற ஆவண ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.