ARTICLE AD BOX

இந்தியன் வங்கிகள் சங்கம் மற்றும் அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் சார்பாக நடத்தப்பட்ட உறுப்பினர்கள் உடனான கூட்டத்தொடரில் பணியாளர்கள் குறைப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை முன் வைத்தது. இந்த நிலையில் வலியுறுத்தப்பட்ட இந்த கோரிக்கைகளை நிறைவேற்றதால் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை, அனைத்து பணியிடங்களிலும் தகுதியுள்ள பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்பது வங்கி ஊழியர்கள் சங்கங்களில் உள்ளடக்கிய UFBU அமைப்பு முன் வைத்திருந்தது.
இந்த கோரிக்கைகள் குறித்து இந்தியா வங்கிகள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வரும் மார்ச் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் மார்ச் மாதம் நான்காவது வார சனிக்கிழமை விடுமுறையோடு ஞாயிறு, திங்கள், செவ்வாய் என தொடர்ந்து நான்கு நாட்கள் அனைத்து வங்கி சேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.