ARTICLE AD BOX
Published : 03 Mar 2025 12:34 AM
Last Updated : 03 Mar 2025 12:34 AM
போலி ஏஐ வீடியோ: ரசிகர்களுக்கு வித்யா பாலன் எச்சரிக்கை

பிரபல இந்தி நடிகையான வித்யா பாலன், தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித் ஜோடியாக நடித்திருந்தார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சமூக ஊடகங்களிலும் வாட்ஸ்அப்-பிலும் நான் இடம்பெற்றிருப்பது போல சில வீடியோக்கள் பரவி வருகின்றன. அவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (ஏ.ஐ) போலி யாக உருவாக்கப்பட்டவை. அதன் உருவாக்கம் மற்றும் அதைப் பரப்புவதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அதில் வரும் விஷயங்கள் எதையும் நான் ஆதரிக்கவில்லை. வீடியோவில் கூறப்படும் எந்த கருத்துக்கும் நான் காரணமல்ல. இதுபோன்ற வீடியோவை பகிர்வதற்கு முன்பு, ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஆலியா பட், தீபிகா படுகோன், கேத்ரினா கைஃப் உட்பட பலர் போலியான டீப்ஃபேக் வீடியோவால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை