ARTICLE AD BOX
மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் மார்த்தாண்டம் பகுதியில் பைக் ஓட்டி வந்த சிறுவனை பிடித்து விசாரித்தபோது, 17 வயதுதான் ஆகியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பைக்கை பறிமுதல் செய்த போலீசார், சிறுவனின் பெற்றோர் மீது மோட்டார் வாகன சட்டம் 199ஏ பிரிவின் கீழ் சிறாருக்கு விதியை மீறி வாகனம் ஓட்டக் கொடுத்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை குழித்துறை ஜெஎம் 2 நீதிமன்றம் விசாரித்து, சிறுவனின் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தது. மேலும் அந்த சிறுவனின் தாய் ஒரு நாள் முழுவதும் நீதிமன்றத்தில் உட்கார வைத்து, கடுமையாக எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டார்.
The post பைக் ஓட்டிய சிறுவனின் தாய்க்கு நூதன தண்டனை: ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிப்பு appeared first on Dinakaran.