ARTICLE AD BOX
சென்னை: அமைச்சர்கள் உடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அரசு ஊழியர்கள் அறிவித்திருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் அறிவித்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியது. ஊதிய முரண்களை களைய வேண்டும்; சிறப்பு காலமுறை, மதிப்பூதியத்தில் பணி செய்வோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
The post பேச்சுவார்த்தையை தொடர்ந்து அரசு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!! appeared first on Dinakaran.