ARTICLE AD BOX
பெங்களூரில் கால் டாக்சி டிரைவரை அடித்துக் கொன்ற எலக்ட்ரீஷியன்! விசாரணையில் பகீர்
பெங்களூர்: பெங்களூரில் தனது மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்ததாக தனது நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வர்தூரை சேர்ந்தவர் சதீஷ் ரெட்டி. இவர் எலக்ட்ரீசியனாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் வசித்து வருகிறார்.

இவருடைய நண்பர் சித்ரதுர்காவை சேர்ந்த கிஷோர்குமார் (34). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கால் டாக்சி டிரைவராக இருந்தார். இவர் சதீஷுக்கு நண்பர் என்பதால் எப்போதெல்லாம் வர்தூருக்கு சவாரிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் தனது நண்பரின் வீட்டிற்கு சென்று அவரை பார்த்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனால் சதீஷுக்கு கிஷோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. தனது மனைவியுடன் கிஷோருக்கு தகாத உறவு இருக்குமோ என சந்தேகமடைந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டருக்கே கிஷோர் குமார் நின்றிருந்ததை சதீஷ் பார்த்துவிட்டார்.
உடனே அவருக்கு ஆத்திரம் பொங்கியது. இதனால் அவருடன் போய் சண்டையிட்டதாக தெரிகிறது. அங்கிருந்த கட்டுமான தொழில் நடக்கும் கட்டடம் அருகே இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆத்திரத்தில் தனது நண்பரை கடுமையாக தாக்கியுள்ளார் சதீஷ்.
கிஷோரை எச்சரித்த சதீஷ், "இனி என் வீட்டு பக்கமே வரக் கூடாது" என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அப்போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிஷோரை பார்த்த அப்பகுதிவாசிகள் உடனே காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தனர்.
தகவலறிந்த போலீஸார் வந்த போது அங்கு கிஷோர் குமார் இறந்திருந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விசாரணையின் பேரில் சதீஷ் ரெட்டியை போலீஸார் கைது செய்தனர்.
- கடவுளே நினைத்தாலும் பெங்களூரை காப்பாற்ற முடியாது.. துணை முதல்வர் டிகே சிவக்குமார் பேச்சு
- வீடியோவுக்காக இப்படியா? பாறையில் இருந்து ஆற்றில் குதித்த பெண் டாக்டர்.. 3 வது நாளில் கிடைத்த உடல்
- டிஐஜி வீட்டுக்கு பக்கத்திலேயே அட்டூழியம்.. சென்னை தொழிலதிபர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை! ஷாக்!
- அம்மாவுடன் கள்ளக்காதல்.. கைவிடாமல் வீட்டுக்கு வந்து சென்ற தொழிலாளி.. மகன்களால் நேர்ந்த கதி
- அண்டர்டேபிள் டீலிங்..கைநீட்டிய அதிகாரிக்கு கம்பி! பிரேம்குமாரை மாட்டிவிட்ட செந்தில்குமார்! பரபர பழனி
- 'அழகா இருக்கீங்க' என மெசேஜ் அனுப்புவது ஆபாசம்தான்! அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
- பெங்களூரில் பிரபல தனியார் ஹோட்டல் மொட்டை மாடியில்.. இளம் பெண்ணிடம் அத்துமீறல்.. 3 பேர் கைது
- மனைவியுடன் நெருக்கமான எலக்ட்ரீசியன்..வீட்டுக்கு வந்து சென்றதால் வந்த சந்தேகம்.. டிரைவர் செய்த செயல்
- சீனாவிடமிருந்து வந்த நல்ல செய்தி.. இனி தங்கம் விலை "இப்படி" தான்! ஒரே போடாக போட்ட ஆனந்த் சீனிவாசன்
- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜகவைச் சேர்ந்த அலிசா அப்துல்லா விடுத்த பரபரப்பு சவால்
- இந்திரஜா குழந்தையை பார்க்காத காரணம் இதுதான்! இந்த இடத்தில் இருந்து மாறிட்டாங்க.. போஸ் வெங்கட் ஓபன்
- ஒரே நடிகையை காதலித்த 3 நடிகர்கள்.. அவரை திருமணம் செய்ய போயி.. மச்சக்கார ஹீரோ.. இப்படியுமா கிசுகிசு?