பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ்! நடக்க முடியுமா? வேறென்ன சிக்கல்கள்?

2 hours ago
ARTICLE AD BOX

ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் நாளை பூமிக்கும் திரும்பவிருக்கும் நிலையில் அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்கள் பற்றி கவலை அதிகரித்திருக்கிறது.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோரை பூமிக்கு திரும்ப அழைத்து வர அனுப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தது.

இந்த டிராகன் விண்கலத்தில் தற்போது சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ள அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷிய நாடுகளைச் சோ்ந்த 4 விண்வெளி வீரா்களுக்கு சில பயிற்சிகளை அளித்த பின்னா், சுனிதா வில்லியம்ஸ், வில்மோா் ஆகியோருடன் மேலும் 2 விண்வெளி வீரா்கள் நாளை பூமி திரும்புவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மிக நீண்ட காலமாக அவர்கள் விண்வெளியில் இருப்பதால், மனித உடல் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும். அதாவது, விண்வெளியில் புவிஈர்ப்பு சக்திஇல்லாததால், மனிதர்களுக்கு எலும்பு அடர்த்தி குறையும், தசைகள் தளர்ச்சியடையும், கண் பார்வை பிரச்னை ஏற்படலாம், கண் நரம்புகளில் அழுத்தம் போன்றவையும் அவர்கள் பூமிக்குத் திரும்பும்போது ஏற்படும்.

இங்நத பிரச்னைகளால், அவர்களால் ஓரிடத்தில் நிற்க முடியாது, அவர்களது உடல் புவிஈர்ப்பு சக்திக்கு ஈடுகொடுத்து சமநிலையில் நிற்க முடியாமல் அவதிப்படும். இதனால் அவர்களால் நடக்கவும் முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Read Entire Article