ARTICLE AD BOX
Published : 06 Mar 2025 11:26 PM
Last Updated : 06 Mar 2025 11:26 PM
“பாலிவுட் ‘டாக்சிக்’ ஆகிவிட்டது; மும்பையை விட்டு வெளியேறிவிட்டேன்” - அனுராக் காஷ்யப் ஆதங்கம்

மும்பை: “பாலிவுட் சினிமா மிகவும் டாக்சிக் ஆகிவிட்டது. திரைத் துறையினரிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறேன்” என்று இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் மும்பையை விட்டு வெளியேறிவிட்டேன். பாலிவுட் சினிமா மிகவும் டாக்சிக் ஆகிவிட்டது. திரைத் துறையினரிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறேன். அனைவரும் நம்பத்தகாத இலக்குகளைத் துரத்துகிறார்கள். ரூ.500 அல்லது ரூ.800 கோடி படங்களை உருவாக்கவே முயற்சிக்கிறார்கள். படைப்புச் சூழல் என்றும் முற்றிலுமாக காணாமல் போய்விட்டது.
ஒரு நகரம் என்பது வெறும் கட்டமைப்பு மட்டுமல்ல, அதன் மக்களும் கூட. இங்குள்ள மக்கள் நம்மை கீழே இழுக்கிறார்கள். தென்னிந்திய இயக்குநர்களை கண்டு பொறாமைப்படுகிறேன். காரணம் இப்போது, என்னால் எதையும் பரிசோதனை செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. தயாரிப்பாளர்கள் வெறும் லாபத்தை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். படம் தொடங்கப்படுவதற்கு முன்பே அதை எப்படி விற்கலாம் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. சினிமா தயாரிப்பின் மகிழ்ச்சி உறிஞ்சப்பட்டுவிட்டது” இவ்வாறு அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- “குடும்பத்துடன் விரதம் இருக்கும் நயன்தாரா” - ‘மூக்குத்தி அம்மன் 2’ படவிழாவில் தயாரிப்பாளர் தகவல்
- “தோனியின் நம்பிக்கை எனக்கு மிகவும் முக்கியம்” - ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சி
- மகா கும்பமேளாவில் பதிவான 471 வழக்குகள் நிலுவை: பிரயாக்ராஜ் போலீஸ் விசாரணைக்கு ஒப்படைப்பு
- வைகை, பல்லவன் உட்பட 20 விரைவு ரயில் சேவையில் மாற்றம்: சென்னை கடற்கரை - எழும்பூர் பாதையில் ஆய்வு