பாம்பன் மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

3 hours ago
ARTICLE AD BOX

ராமேஸ்வரம்: பாம்பனில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14 பேரை கைது செய்து, ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை அவர்களை கைது செய்யும் சம்பவங்கள் சமீபகாலமாக மீண்டும் அதிகரித்துள்ளது. இதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சூழலில் மீண்டும் 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 90 படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று மன்னார் வளைகுடா கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, மன்னார் கடற்பகுதியில் இருந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்தனர். தொடர்ந்து இலங்கை கடற்படை ஐந்துக்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் மீனவர்களை சுற்றி வளைத்து சிறை பிடித்தது. இதில் ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான படகை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், 14 பேரை கைது செய்து, ஒரு படகை பறிமுதல் செய்தனர்.

The post பாம்பன் மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம் appeared first on Dinakaran.

Read Entire Article