ARTICLE AD BOX
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இருந்து, கடந்த 6ம் தேதி ஆரோக்கியம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகினையும், அதிலிருந்த ஆரோக்கியம், செல்வம், ஜெயாஸ்டன், ஜோஸ்வா, சீமோன் உள்ளிட்ட 14 மீனவர்களையும் சிறைபிடித்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களை தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனர்.
இவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்கள் 14 பேருக்கும், இலங்கை மதிப்பில் தலா ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மொத்த அபராதம் இந்திய மதிப்பில் ரூ.18 லட்சம் ஆகும். மேலும் மீனவர்களின் விசைப்படகு நாட்டுடமையாக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. அபராத தொகை கட்டிய பின் விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post பாம்பன் மீனவர்களுக்கு ரூ.18 லட்சம் அபராதம்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.