பாஜகவால் ஜெயலலிதா ஆட்சியை தர முடியும்: டிடிவி.தினகரன் நம்பிக்கை

2 hours ago
ARTICLE AD BOX

Published : 15 Mar 2025 08:41 AM
Last Updated : 15 Mar 2025 08:41 AM

பாஜகவால் ஜெயலலிதா ஆட்சியை தர முடியும்: டிடிவி.தினகரன் நம்பிக்கை

<?php // } ?>

திருச்சி: தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை தர முடியும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.

திருச்சியி செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: டாஸ்மாக் அலுவலகம், மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி ஊழல் நடத்திருப்பதுபோல, சென்னை மாநகராட்சியில் கழிப்பறைத் திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது. இதுபோன்ற ஊழல்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயம் தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகவும் வர வேண்டும். அது பழனிசாமியுடனா, பழனிசாமி இல்லாமலா என்று தெரியாது.

அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா இணைந்தாலும், நாங்கள் தனிக்கட்சி தொடங்கியுள்ளதால், தொண்டர்களின் கருத்து கேட்டுத்தான் முடிவு எடுக்கப்படும். தமிழக அரசின் பட்ஜெட் லோகோவில் ‘ரூ’ என்ற எழுத்து மாற்றப்பட்டது சிறுபிள்ளைகள் விளையாட்டுபோல உள்ளது.

தமிழ் மொழி குறித்து பெரியார் கூறியதைத்தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். பெரியார் எங்களுக்கும் கொள்கை ரீதியான தலைவராக இருந்தாலும், அவரது கடவுள் மறுப்பு, பிராமணர் எதிர்ப்பு கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article