ARTICLE AD BOX
Published : 18 Mar 2025 07:56 AM
Last Updated : 18 Mar 2025 07:56 AM
பாகிஸ்தான் வாரியத்துக்கு ரூ.738 கோடி நஷ்டம்

புதுடெல்லி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்த தொடரை நடத்துவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய 3 மைதானங்களின் சீரமைப்பு பணிக்காக இந்திய மதிப்பில் சுமார் ரூ.504 கோடியை செலவிட்டிருந்தது. இது ஏற்கெனவே மதிப்பிட்ட தொகையைவிட 50 சதவீதம் அதிகரித்திருந்தது.
தொடர்ந்து போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளுக்கான என ஒட்டுமொத்தமாக ரூ.868 கோடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதலீடு செய்திருந்தது. ஆனால் இதுவரை பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்றதற்கு கட்டணமாக ரூ.52 கோடி மட்டுமே திரும்பி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டிக்கெட் விற்பனை, ஸ்பான்சர்கள் வாயிலாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தியதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரூ.738 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியத்தை 90 சதவீதம் குறைத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். மேலும் தங்குமிடம், பயணக்கட்டணம் ஆகியவற்றில் கெடுபிடிகளை காட்டி வருகிறது. முன்னர் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்ட வீரர்கள் தற்போது சாதாரண வசதி கொண்ட ஓட்டல்களில் தங்கியுள்ளனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படம் ஒட்டும் போராட்டம்: முதல் குற்றவாளி ஸ்டாலின்தான் என அண்ணாமலை விமர்சனம்
- சிஎஸ்கே போட்டிக்கு டிக்கெட் நாளை விற்பனை!
- டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ் நியமனம்
- சென்னை | காய்கறி வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி: சரித்திரப் பதிவேடு குற்றவாளி கூட்டாளியுடன் கைது