பாகிஸ்தானின் பஞ்சாப்பில் அகமதியர் வழிபாட்டு தலம் இடிப்பு: போலீசார் அராஜகம்

5 hours ago
ARTICLE AD BOX

லாகூர்: பாகிஸ்தானில் அகமதியா முஸ்லிம்கள் சிறுபான்மையினர்களாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு, அகமதியாக்களை முஸ்லிம்களாக அங்கீகரிக்கப்படவில்லை. அவர்கள் மெக்கா புனித யாத்திரை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலாவில் உள்ள சாத்தா பகுதியில் 120 ஆண்டு பழமையான அகமதியாக்கள் வழிபாட்டு தலம் இடிக்கப்பட்டிருப்பதாக ஜமாத் இ அகமதியா எனும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. தெஹ்ரீக் இ லப்பைக் பாகிஸ்தான் எனும் தீவிர இஸ்லாமிய கட்சியின் நெருக்கடியை தொடர்ந்து போலீசாரும், அக்கட்சியினரும் இணைந்து வழிபாட்டுத் தலத்தை இடித்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 5 அகமதியாக்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஜமாத் இ அகமதியா அமைப்பு கூறி உள்ளது. முஸ்லிம் மசூதி போல அகமதியா வழிபாட்டு தலத்தின் கோபுரங்கள் அமைந்திருப்பதாக வந்த புகாரின் பேரில் இடிக்கப்பட்டதாகவும் இதை அனுமதிக்க முடியாது என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

The post பாகிஸ்தானின் பஞ்சாப்பில் அகமதியர் வழிபாட்டு தலம் இடிப்பு: போலீசார் அராஜகம் appeared first on Dinakaran.

Read Entire Article