பள்ளி மாணவர்களுக்கு இணைய வழி சான்றிதழ் படிப்பு… பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட தகவல்…!

2 hours ago
ARTICLE AD BOX

தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உயர்கல்வி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த வகுப்புகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்களது உயர்கல்வி சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைய வழியில் சான்றிதழ்களுடன் படிப்பு வழங்க திட்டமிட்டுள்ளது.

இதன்படி பள்ளி நேரம் முடிந்த பின்னர் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் இந்த சான்றிதழ் படிப்புகளை கற்றுக் கொள்ளலாம். பள்ளி நேரம் முடிந்த பின் இந்த வாய்ப்பினை விருப்பமுள்ள மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். திறன் மேம்பாட்டு கழகம் இணையமுறையிலான சான்றிதழ் படிப்பை பயன்படுத்திக் கொள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாணவர்கள் உயர்கல்வி குறித்த தெளிவினை முன்கூட்டியே அறிய ஒரு வாய்ப்பாகும்.

Read Entire Article