ARTICLE AD BOX

ஷூட்டிங் லீக் ஆகிவிட்டது என்பதுகூட நவீன விளம்பரமோ எனவும் நெட்டிசன்ஸ் தெறிக்க விடுகின்றனர். விஷயத்திற்கு வருவோம்..
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். மற்றும் அதர்வா, ஸ்ரீலீலா, தேவ் ராம்நாத், ப்ரித்விராஜ் இவர்களுடன் மின்னல் முரளியும் இணைந்துள்ளார். படத்தின் ஷூட்டிங் நிகழ்வு லீக் ஆகி பரவி வருகிறது. அதில்,
பாசில் ஜோசப் உடன் ரவி மோகன் பேசுகிறார். பழைய காலத்து ரயில்வே ஸ்டேஷன் செட் பின்னணி தெரிகிறது. இது இலங்கையில் எடுக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக காரைக்குடி மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஷூட்டிங் நடைபெற்றது. இப்படம் சிவகார்த்திகேயனின் 25-வது படம். ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு 100-வது படமாகும்.
ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக எடுக்கப்படும் திரைப்படம். ஆதலால், சூர்யா நடிக்க மறுத்த நிலையில் எஸ்கே நடித்து வருகிறார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இது குறித்து இணையவாசிகள், இப்படம் ஹிந்தியில் வெளியிட்டு வசூல் சாதனை புரியுமா? என கேட்டு வருகின்றனர்.

The post ‘பராசக்தி’ படத்தில் பாசில் ஜோசப்பை தொடர்ந்து மின்னல் முரளி: லீக் நிகழ்வு.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.