ARTICLE AD BOX
சென்னையில் நேற்று முன்தினம் அத்துமீறி போராட்டம் நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை கடந்த வாரம் தெரிவித்தனர். இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமைக் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு சென்னை காவல் துறை அனுமதி மறுத்தது.
இந்த நிலையில், பனையூர் வீட்டில் இருந்து போராட்டத்துக்கு தனது ஆதரவாளர்களோடு வந்த மாநில தலைவர் அண்ணாமலை அக்கரை அருகே கைது செய்யப்பட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டார். இதேபோல அந்தக் கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டைவிட்டு வெளியே வரும்போதே கைது செய்யப்பட்டார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் இருந்து ஊர்வலமாகச் சென்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அன்று மாலை விடுவிக்கப்பட்டனர். அதன்படி, சென்னை முழுவதும் நீலாங்கரை, தரமணி, எழும்பூர், விருகம்பாக்கம், கோட்டை உள்ளிட்ட இடங்களில் காவல் துறை அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவைச் சோ்ந்த 242 பெண்கள் உள்பட 1,080 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post பரபரப்பு…! 242 பெண்கள்.. அண்ணாமலை உள்ளிட்ட 1000-திற்கும் மேற்பட்ட பாஜக-வினர் மீது வழக்கு பதிவு…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.