பங்குச்சந்தையின் சரிவு தொடர்கிறது.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்த முதலீட்டாளர்கள்..!

3 days ago
ARTICLE AD BOX

பங்குச்சந்தையின் சரிவு தொடர்கிறது.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்த முதலீட்டாளர்கள்..!

பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சரிந்து கொண்டு வருவதால், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. சில நாட்களில் காலையில் உயர்ந்தாலும், மதியத்திற்கு மேல் மீண்டும் பங்குச்சந்தை சரிந்து, முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 400 புள்ளிகள் சரிந்து, 75,340 என்ற புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 129 புள்ளிகள் சரிந்து, 22,784 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் TCS, HDFC, டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், இன்போசிஸ்,  ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன.

அதே நேரத்தில், சிப்லா, ITC, ஏஷியன் பெயிண்ட்ஸ், டைட்டான், HDFC வங்கி, ஆக்சிஸ் வங்கி, பிரிட்டானியா, ஸ்டேட் வங்கி, அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
Read Entire Article