ARTICLE AD BOX
மும்பை : பங்குச்சந்தை திங்கள்கிழமை(பிப். 24) சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் இன்று சரிவைக் கண்டுள்ளன.
வாரத்தின் முதல் வனிக நாளான இன்று காலை 9.15 நிலவரப்படி, சென்செக்ஸ் 536.05 புள்ளிகள் (0.71 சதவீதம்) இழப்புடன் 74,775.01-இல் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 165.55 புள்ளிகள் (0.73 சதவீதம்) இழப்புடன் 22,630.35-இல் வர்த்தகமாகி வருகிறது.