ARTICLE AD BOX
ராணிப்பேட்டை: நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு மாவட்டச் செயலாளர் விலகினார். நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் கட்சியிலிருந்து விலகினார். கட்சியை சீமான் வீழ்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார் என பாவேந்தன் குற்றம் சாட்டினார். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சீமான் இன்று செல்லும் நிலையில் பாவேந்தன் விலகியுள்ளார். 2019-ல் அரக்கோணம் நாடாளுமன்றத் தேர்தல், 2021-ல் சோளிங்கரில் நா.த.க. சார்பில் போட்டியிட்டவர் பாவேந்தன்.
The post நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு மாவட்டச் செயலாளர் விலகல் appeared first on Dinakaran.