ARTICLE AD BOX
நான் சாரி கேட்கிறேன் ப்ளீஸ்.. போலீஸிடம் பேசிய சீமான் மனைவி.. என்னங்க சாரி.. கடுப்பான அதிகாரி!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அழைத்து செல்லும் போது, சீமான் மனைவி கயல்விழி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோர்ட் ஒட்டும் சம்மனை கிழிக்க கூடாது என்ற விதி உள்ளது.

ஆனால் அதை மீறி நடிகை பாலியல் வழக்கில், சீமான் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் என அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. சம்மன் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டு காவலாளி தாக்கியதால் அவரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது போலீஸ்.
சீமான் காவலாளி மிரட்டல்
விசாரணைக்கு வந்த போலீசாரை சீமான் வீட்டின் காவலாளி தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து போலீசார் அங்கே வந்து காவலாளி சுபாகர், அமல்ராஜ் இருவரையும் கைது செய்தனர். அதோடு அவரின் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
சீமான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய சீமானின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், நடிகை அளித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.
மன்னிப்பு கேட்ட சீமான் மனைவி
சீமான் ஓசூரில் உள்ள நிலையில் சீமான் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அழைத்து செல்லும் போது, சீமான் மனைவி கயல்விழி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார். போலீசாரிடம் சென்று.. சார் சாரி சார் என்று என்று கூறினார்.
அதற்கு போலீஸ் அதிகாரி.. என்னங்க சாரி.. என்ன சாரி.. விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியிடம் இப்படித்தான் செய்வீர்களா? என்று கடுமையாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து கயல்விழி அந்த போலீஸ் அதிகாரியிடம் சாரி கேட்டபடியே பின்னால் சென்றார்.
வழக்கறிஞர் மறுப்பு
சீமான் வழக்கறிஞர் டீம் அளித்துள்ள விளக்கத்தில், சீமான் வீட்டு காவலாளி போலீசாரை தாக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
முன்னாள் ராணுவ வீரர் என்பதால் உரிமம் பெற்ற துப்பாக்கியை காவலாளி வைத்துள்ளார். நோட்டீஸ் ஒட்டிய பின் அதில் உள்ள தகவலை தெரிந்த பின்னரே கிழித்துள்ளனர். சீமான் வீட்டில் குண்டு வீசப்போவதாக வந்த தகவலால் காவலாளி துப்பாக்கியுடன் இருந்தார், என்று சீமான் வழக்கறிஞர் டீம் தெரிவித்துள்ளது.
சீமான் வீட்டில் சம்மன்
நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜாராக வேண்டும் என்று சீமானுக்கு சம்மன்அனுப்பிட்டு உள்ளது. சென்னையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் வளசரவாக்கம் போலீசார் சம்மனை ஒட்டியுள்ளனர்
போலீசார் சம்மன் ஒட்டிய சில நிமிடங்களில் அந்த சம்மன் கிழிக்கப்பட்டதால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோர்ட் ஒட்டும் சம்மனை கிழிக்க கூடாது என்ற விதி உள்ளது. அதை மீறி இப்படி செய்ததால் சீமான் மீது எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
- அஸ்திவாரமே ஆடுதோ? போலீசில் அப்படியென்ன சொன்னார் விஜயலட்சுமி? சீமான் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை
- ஆஹா.. சீமான் வழக்கு ரொம்ப சீரியசாகுதே.. 5 மணி நேரம் விஜயலட்சுமியிடம் விசாரித்த போலீஸ்
- விஜயலட்சுமி பலாத்காரம்- குற்றச்சாட்டு உறுதியானால் சீமானுக்கு 6 ஆண்டு ஜெயில்- நாம் தமிழர் கட்சி கதி?
- சீமானுக்கு ஆண்மை பரிசோதனை- நடிகை விஜயலட்சுமி பலாத்காரம், கருக்கலைப்பு வழக்கு விஸ்வரூபம்!
- ஓபிஎஸ் என்னாச்சு? கைவிரித்த திமுக..கண்ணீர் விடும் அரசு ஊழியர்கள்! ஜாக்டோ ஜியோவுடன் கைகோர்த்த சீமான்
- புட்டுப் புட்டு வைத்த விஜயலட்சுமி.. மேட்டர் சீரியஸ்! வளசரவாக்கம் வெயிட்டிங்.. சீமான் திடீர் முடிவு!
- பறிபோகும் தமிழக லோக்சபா தொகுதிகள்- அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கும் சீமான்- காரணம் என்ன?
- “நீங்க நடத்துற பள்ளிகளில் தமிழ் எங்கே? அண்ணாமலை கேட்டாரே.. பதில் சொல்லுங்க” ஆவேசமாக கேட்ட சீமான்!
- சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் திட்டம்? கோவை ராமகிருட்டிணன் தபெதிகவினர் 3 பேர் கைது
- எம்பி சீட் கேட்ட காளியம்மாள்.. திமுக தந்த ரியாக்சன்.. குறுக்கே வந்த ஆதவ் அர்ஜுனா.. பயங்கர ட்விஸ்ட்
- கொத்து கொத்தாக உதிரும் 'இலைகள்'.. பட்டமரமாகும் சீமான்..மேலும் ஒரு மா.செ. நாதகவை விட்டு தப்பி ஓட்டம்!
- விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் ரூ 25 லட்சம் வென்ற காளியம்மாள்!