ARTICLE AD BOX
நாகப்பட்டினம்: நாகை-இலங்கை கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை வாரத்தில் 6 நாட்கள் கப்பல் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 28ம் தேதி வரை கடலில் பலத்த காற்று மற்றும் மழை பெய்யகூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து நாளை(28ம் தேதி) வரை கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், வரும் 1ம் தேதி முதல் கப்பல் சேவை வழக்கம் போல் நடைபெறும் என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
The post நாகை-இலங்கை கப்பல் சேவை தற்காலிக ரத்து appeared first on Dinakaran.