நாகர்கோவிலில் சாலைகளில் இருந்த ஆக்ரமிப்புகள் அகற்றம்

13 hours ago
ARTICLE AD BOX


நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முன் சாலையை ஆக்கிரமித்து பலகைகள், இரும்பிலான நடப்பதற்கான பதாகைகள் வைத்துள்ளனர். இதனால் வாகனங்கள் நிறுத்தவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் பெரும் இடையூறாக உள்ளது. இவ்வாறு கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முன் ஆக்கிரமிப்புகள் கூடாது என மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் மாநகரில் மீனாட்சிபுரம், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, எஸ்.பி. அலுவலக சாலை, செட்டிக்குளம், அவ்வை சண்முகம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் உள்ள சில வர்த்தக நிறுவனங்கள், கடைகள் முன் ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஒரு சில கடைகளில் விற்பனைக்காக பொருட்களையும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை மீனாட்சிபுரம் பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள கடைகள் முன் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். மீனாட்சிபுரம் ஆவின் முன் பொதுமக்கள் வருவதற்காக இரும்பிலான தற்காலிக நடைபாதை ஏணி இருந்தது. அதையும் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி சென்றனர்.

The post நாகர்கோவிலில் சாலைகளில் இருந்த ஆக்ரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article