ARTICLE AD BOX
நாம் ஏதோ ஒன்றை நினைத்து அதை வெற்றிக்கு வழி வகுப்பதாக கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதற்கு எண்ணம் சீராக இருக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் நலமாக வித்திடும் நல்ல வழியில் செல்லும்போது எல்லாமே நன்மையில் முடியும் சில நேரங்களில் சில அசம்பாவிதங்கள் நடக்க இருந்தாலும் செல்லும் பாதை நல்ல பாதியாக இருந்தால் அதை இறுதியில் நல்ல வழிக்கு கொண்டு வந்திட முடியும்….
யார் எந்த விஷயத்தை சொன்னாலும் அதை நல்ல விதமாக புரிந்து கொள்ள வேண்டும் நாமாக அதற்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டு பிரச்சனைக்கு வழி வகுக்காமல் இருந்தால் அதன்மூலம் நாம் பேசும் பேச்சு எடுபடும் இதனால் எந்த நேரத்திலும் விலகி இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது ஆதலால் சுத்தம் சுழல் வாழ்வதற்கு நல்ல புரிதல் அவசியம்..
வீட்டில் பெற்றோர்கள் உற்றார் உறவினர் நட்பு கணவன் மனைவி யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு விஷயத்தை சொன்னால் அதற்காக குறைப்பட்டு கொண்டு ஒதுங்கி விடாமல் அடுத்த முறை பேசும்பொழுது சகஜமாக பேசும்படி வார்த்தைகளைப் பேச வேண்டும் குத்தல் குமறல் போன்ற வார்த்தைகளை மறந்தும் உபயோகிக்க கூடாது. அப்படி சில நேரங்களில் நம் குறைகளை எடுத்துக் கூறினால் அதை இயல்பாக எடுத்துக் கொண்டு அடுத்த முறை இருவருக்குள்ளும் போட்டி போடாமல் முகம் கொடுத்து தானே முன் நின்று பேசுவதற்கு முன் வர வேண்டும்..
எந்த ஒரு பொருளையும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடுவது சிலருக்கு பழக்கம் அதேபோல் தன் அண்ணன் தங்கை அக்கா போன்ற உறவுகள் தன்னை விட்டு மற்றவர்களிடம் அதிகமாக பாசம் காட்டினால் அதைப் பிடித்தவர்களும் இருக்கிறார்கள் அதே போல் கணவர் மற்ற பெண்களிடம் பேசினாலும் மனைவி மற்றவர்களிடம் பேசினாலும் அதை பொறுத்துக் கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள் அதை தவறாக புரிந்து கொள்ளாமல் உறவுக்கு நட்புக்கு பாலம் அமைக்கும் வழி என்று எடுத்துக்கொள்ள வேண்டும்..
நாம் எதை நினைக்கிறோமோ அதையே வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் செய்ய வேண்டுமென்று தம் எண்ணத்தை திணிப்பதை நிறுத்த வேண்டும். அவர்களுக்கும் சொந்த விருப்பு வெறுப்பு இருக்கும் அவர்களின் வாழ்க்கையை அவர்களின் இயல்பு வலி வாழ விடுவது தான் சிறந்தது ஆதலால் படிப்பு கலை வேலை பேசும் இடம் அனைத்திலும் தன்னுடைய எண்ணத்தை திணிக்காமல் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது நல்லது..
எந்த ஒரு விஷயத்தையும் சந்தேகப்படாமல் மனம் விட்டு பேசி விட்டால் வீட்டில் உள்ள அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும் இது வீட்டில் மட்டுமல்ல சுற்றுத்திலும் கூட. ஆதலால் அவரவர் எண்ணத்தை மனம் விட்டு பேசினால் எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்கும். எல்லாம் எனதாக வேண்டும் என்று எண்ணுவதை விட எண்ணம் எல்லாம் நிலையானதாக வேண்டும் என்று எண்ணுவதே உண்மையான இன்பம்..!!