ARTICLE AD BOX

ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பில்லை; நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இதன் மூலம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணையை அதிகாரப்பூர்வமாக முடித்துள்ளது.
ஆகஸ்ட் 2020 இல் இந்த வழக்கை கையகப்படுத்திய சிபிஐ, மும்பை நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்து, அவரது தற்கொலைக்கு எந்தவொரு தவறான செயல் அல்லது வெளிப்புற அழுத்தமும் இல்லை என்று நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சுஷாந்தின் தந்தை நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளையும் இந்த இறுதி அறிக்கை நிராகரிக்கிறது. இதனால் அவர்கள் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஆதாரம்
ஆதாரம் இல்லை
எய்ம்ஸ் தடயவியல் நிபுணர்களுடன் நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையில், நிதி முறைகேடு அல்லது சுஷாந்தின் டிஜிட்டல் பதிவுகளை சேதப்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
சிபிஐ தரப்பில் வழக்கு முடிக்கப்பட்ட போதிலும், சுஷாந்தின் குடும்பத்தினர் இதை எதிர்த்து எதிர்ப்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் மிகவும் விவாதிக்கப்பட்ட இந்த வழக்கில், ஜாமீன் வழங்குவதற்கு முன்பு ரியா சக்ரவர்த்தி 27 நாள் சிறைவாசம் உட்பட கடுமையான ஆய்வு மற்றும் சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஜூன் 14, 2020 அன்று, 34 வயதில், சுஷாந்த் தனது பாந்த்ரா அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்தார்.
சிபிஐ அறிக்கை இப்போது வந்துள்ள நிலையில், மேல்முறையீடு செய்யாவிட்டால், வழக்கு சட்டப்பூர்வ முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.