தேர்தல் செயல்முறைகளில் மாற்றம்! டெல்லியில் ஆலோசனைக் கூட்டம்!!

3 hours ago
ARTICLE AD BOX

நேற்று காலை மதுரை வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை மற்றும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர்கள் சேர்த்தல், வாக்குச்சாவடி அலுவலர் பணி, வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், ”மார்ச் 4 மற்றும் 5ம் தேதி டெல்லியில் அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடக்க உள்ளது. இதில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு மாநில தேர்தல் அதிகாரி, ஒரு மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, கலந்து கொள்வார்கள். இதில் தேர்தல் செயல்முறைகள் தொடர்பாக எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் முடிவுகள் எடுக்கப்படும். குறிப்பாக வாக்காளர்கள் எளிமையாக வாக்களிக்கும் வகையில் சில நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்தார்

Read Entire Article