ARTICLE AD BOX
ஹைதராபாத் : தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்.22-ஆம் தேதி சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
15 நாள்களைக் கடந்தும் நடைபெற்று வரும் சவாலான மீட்புப்பணியில் இன்று(மார்ச் 9) குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள மோப்ப நாய்கள் உதவியுடன் நடைபெற்ற சோதனையில் இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு தொழிலாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மீட்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுரங்கத்தில் எஞ்சியுள்ள உடல்களைக் கண்டுபிடிக்கும் பணியில் இப்போது ரோபோக்களும் பயன்படுத்தபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.