தூள்…! பால் உற்பத்தியாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.50,000 ஆக உயர்வு…!

16 hours ago
ARTICLE AD BOX

பால் உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசின் உதவித்தொகைகள் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்கள் விபத்தில் உயிரிழந்தால் வழங்கும் இழப்பீட்டை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இரு குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ.25,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, நிதி உதவிகளை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல வாரியத்தின் விதிகளை திருத்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; விபத்து மரணம் அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இரண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ.25000ல் இருந்து ரூ.50000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு பெண் குழந்தைக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ரூ.30,000 இருந்து ரூ.60,000 ஆக அதிகரித்துள்ளது. ஈமச்சடங்கு உதவித் தொகையை ரூ.5,000லிருந்து ரூ.25,000ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உறுப்பினரின் குழந்தைகள் அவர்கள் வேலை செய்யும் வரை அல்லது திருமணம் செய்து கொள்ளும் வரை அல்லது 25 வயது அடையும் வரை மற்றும் உறுப்பினரைச் சார்ந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தூள்…! பால் உற்பத்தியாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.50,000 ஆக உயர்வு…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article