“திருமணமான ஒரே மாதத்தில் பிரிந்து விட்டோம்” - நடிகை ரன்யா ராவ் கணவர் தகவல்

1 day ago
ARTICLE AD BOX

Published : 17 Mar 2025 08:49 PM
Last Updated : 17 Mar 2025 08:49 PM

“திருமணமான ஒரே மாதத்தில் பிரிந்து விட்டோம்” - நடிகை ரன்யா ராவ் கணவர் தகவல்

<?php // } ?>

பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள நடிகை ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி, தங்களுக்கு திருமணமான ஒரே மாதத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்வதில் இருந்து விலக்கு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர் மீது எந்த நடவடிக்கையையும் அடுத்த விசாரணை (மார்ச் 24) வரை எடுக்க கூடாது என கூறியுள்ளார். இதற்கு வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதை எதிர்த்து விரைவில் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ரன்யா ராவை ஜதின் ஹுக்கேரி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்தார் என்று அவரது தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இருப்பினும் தனிப்பட்ட சிக்கல் காரணமாக ஒரே மாதத்தில் (டிசம்பர்) இருவரும் பிரிந்து விட்டனர் என நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

ரன்யா ராவ் கைதான நிலையில் திருமணத்துக்கு பிறகு தனது மகள் தங்கள் குடும்பத்துடன் நெருங்கி பழகுவது இல்லை என போலீஸ் டிஜிபி ராமசந்​திர ராவ் தெரிவித்திருந்தார். இதையடுத்து அனைவரது கவனமும் ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி பக்கம் திரும்பியது. இந்த நிலையில் தங்கக் கடத்தல் வழக்கில் தன்னையும் போலீஸார் கைது செய்யக்கூடும் என அஞ்சி அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதற்கு மத்தியில் இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக மாநில அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழு டிஜிபி ராமசந்​திர ராவை இன்று (மார்ச் 17) விசாரித்தது. இந்த விசாரணை அறிக்கை இரண்டு நாட்களில் வெளியாகும் என தகவல். தங்க கடத்தலில் அவருக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமசந்​திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகை​யு​மான‌ ரன்யா ராவ் (32) துபா​யில் இருந்து 14.8 கிலோ தங்​கம் கடத்தி வந்​த​தால் கடந்த 3-ம் தேதி பெங்​களூரு சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் கைது செய்​யப்​பட்​டார். அவர் மீது வழக்​குப்​ப​திவு செய்​துள்ள வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் அவ‌ரது வீட்​டில் நடத்​திய சோதனை​யில் ரூ.2.67 கோடி ரொக்​கப்​பண​மும், ரூ.2.06 கோடி மதிப்​பிலான தங்க நகைகளும் சிக்​கின.

ரன்யா ராவை விசா​ரித்​த​தில் அவருக்கு சர்​வ​தேச தங்க கடத்​தல் கும்​பல் மற்​றும் பெங்​களூரு​வின் முக்​கிய புள்​ளி​களு​டன் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து பெங்​களூரு நட்​சத்​திர விடு​தி​யின் உரிமை​யாளர் தருண் ராஜ் கைது செய்​தனர். இதையடுத்து சிபிஐ மற்​றும் அம‌லாக்​கத்​ துறை அதி​காரி​கள் ரன்யா ராவ் மீது வழக்​குப் ​ப​திவு செய்​து, விசா​ரித்து வரு​கின்​ற‌னர்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article