திருச்செந்தூர் கோயில் அருகே 50 அடிக்கு உள்வாங்கிய கடல்: பாசி படர்ந்த பாறைகள் தெரிந்தது

14 hours ago
ARTICLE AD BOX


திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே நேற்று கடல் சுமார் 50 அடி உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயில், அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக நீராடி மகிழ்கின்றனர். இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது.

கடந்த மார்ச் 13ம் தேதி முதல் மார்ச் 14ம் தேதி வரை பவுர்ணமி இருந்தது. இதன் காரணமாக நேற்று கோயில் அருகே சுமார் 50 அடி தூரம் கடல் உள்வாங்கி பச்சைப்பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இருந்தபோதிலும் பக்தர்கள் வழக்கம்போல கடலில் நீராடினர்.

The post திருச்செந்தூர் கோயில் அருகே 50 அடிக்கு உள்வாங்கிய கடல்: பாசி படர்ந்த பாறைகள் தெரிந்தது appeared first on Dinakaran.

Read Entire Article