ARTICLE AD BOX
நடிகர் யஷ் தமிழ் இயக்குநருடன் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
தொடர்ந்து, யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: விடாமுயற்சி ஓடிடி தேதி!
டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் யஷ் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்கான திரைக்கதை வேலைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது, பி. எஸ். மித்ரன் நடிகர் கார்த்தியை வைத்து சர்தார் - 2 படத்தை இயக்கி வருகிறார்.