ARTICLE AD BOX

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 27.1. 2025 அன்று உத்தரவிட்டது. அந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு 2 நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்த தீர்ப்பு 6.3.2025அன்று உறுதி செய்யப்பட்டது.
எனவே மாவட்ட ஒன்றிய, நகர பகுதி, பேரூர், வார்டு கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும் பொது இடங்களிலும் வைத்துள்ள கழக கொடி கம்பங்களை மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பை ஏற்று தாங்களே முன்வந்து 15 நாட்களுக்குள் அகற்றிட வேண்டும் எனவும், அவ்வாறு அகற்றப்பட்ட கழக கொடி கம்பங்களின் விவரங்களை தலைமை கழகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.