ARTICLE AD BOX

வழக்கம்போல இந்த ஆண்டும் கோடை காலத்துக்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. காலையில் பனி பெய்வதும், மதியம் வெயில் கொளுத்துவதுமாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தமிழகத்தில் நாளை(25-02-2025) முதல் மிதமான மழை பெய்யும் எனவும், இயல்பை விட, வெப்பநிலை குறைவாக பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. மேலும், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை, வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. இந்தச் சூழல் மெல்ல மெல்ல மாறி வருகிறது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில், இன்று பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும். காலை வேளையில் பனி மூட்டம் நிலவும். இதேபோல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், நாளை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையுமா? அதிகரிக்குமா?* வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன? appeared first on Rockfort Times.