<p style="text-align: justify;">மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்லாவிட்டால், முன்னறிவிப்பின்றி தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<h2 style="text-align: justify;">ரயில் பயணிகள் ஆலோசனை கூட்டம் </h2>
<p style="text-align: justify;">மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில் மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கம் சார்பில் ரயில் பயணிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெக. சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வைத்தீஸ்வரன்கோயில் ரயில் பயணிகள் சங்கத்தினர் முன்நின்று முறையாக ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி உள்ள பிரச்சினைகளை குறித்து விளக்கி அதன் மூலம் தீர்வுகாணசெய்ய முயல்வது என ஆலோசித்தனர். </p>
<p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/03/23/ae4f7b7aea5c2590a4014b72f8b9bbb61742711814980113_original.jpg" /></p>
<h2 style="text-align: justify;">மேலும் பல விவாதங்கள் </h2>
<p style="text-align: justify;">மேலும் நவகிரக ஸ்தலங்களில் செவ்வாய் ஸ்தலமாக வைத்தீஸ்வரன்கோயில் விளங்குவதால், பல்வேறு மாவட்ட பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். அதே போல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாடி ஜோதிடம் பார்த்திடவும் மக்கள் வருகின்றனர். ஆனால், வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் தென்னக ரயில்வே செவிசாய்க்கவில்லை.</p>
<h2 style="text-align: justify;">போராட்டம் நடத்திட முடிவு </h2>
<p style="text-align: justify;">அதேபோல், சீர்காழியில் அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்லவும், உழவன் ரயில் சென்னை மார்க்கத்தில் போகும்போது மட்டும் நின்று செல்கிறது. வரும்போது நிற்பதில்லை. இது குறித்தும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. எனவே, வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை தென்னக ரயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது, தீர்வு உடனடியாக கிடைக்காவிட்டால் முன் அறிவிப்பு இன்றி கடைகள் அடைப்பு போராட்டம் நடத்தி கார், வேன், ஆட்டோ நிறுத்தம் செய்து பொதுமக்கள், பக்தர்கள், ரயில் பயணிகள் இணைந்து தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p>
<p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/03/23/2b1cd3bfaad748eba27191e3379424271742711841559113_original.jpg" /></p>
<h2 style="text-align: justify;">ரயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜெக. சண்முகம்</h2>
<p style="text-align: justify;">கூட்டத்தில், ரயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜெக. சண்முகம் பேசுகையில், "வைத்தீஸ்வரன்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு அனைத்து ரயில்களும் நின்று செல்லாததால், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்" என்றார்.</p>
<h2 style="text-align: justify;">ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள்</h2>
<p style="text-align: justify;">மேலும், கூட்டத்தில் பங்கேற்ற பயணிகள் மற்றும் பொதுமக்கள் பேசுகையில், "வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். சீர்காழியில் அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும். உழவன் ரயில் சீர்காழியில் இரண்டு திசையிலும் நின்று செல்ல வேண்டும். இந்த கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், நாங்கள் தொடர் போராட்டங்களை நடத்துவோம்" என்றனர். இக்கூட்டத்தில், ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள், பயணிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
<p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/03/23/ef44781e33c8b23147fb92c853af34101742711874216113_original.jpg" /></p>
<h3 style="text-align: justify;">வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையத்தின் முக்கியத்துவம்</h3>
<ul style="list-style-type: square;">
<li style="text-align: justify;">நவகிரக ஸ்தலங்களில் செவ்வாய் ஸ்தலமாக வைத்தீஸ்வரன்கோயில் விளங்குகிறது.</li>
<li style="text-align: justify;">இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாடி ஜோதிடம் பார்த்திட மக்கள் வருகின்றனர்.</li>
<li style="text-align: justify;">தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.</li>
</ul>
<h3 style="text-align: justify;">ரயில் பயணிகள் நல சங்கத்தின் கோரிக்கைகள்</h3>
<ul>
<li style="text-align: justify;">வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்.</li>
<li style="text-align: justify;">சீர்காழியில் அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும்.</li>
<li style="text-align: justify;">உழவன் ரயில் சீர்காழியில் இரண்டு திசையிலும் நின்று செல்ல வேண்டும்.</li>
</ul>
<h3 style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/03/23/fcb9965af340da92993273efc081aeb81742711907930113_original.jpg" /></h3>
<h3 style="text-align: justify;">போராட்டத்தின் எச்சரிக்கை</h3>
<ul style="list-style-type: square;">
<li style="text-align: justify;">கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், முன் அறிவிப்பு இன்றி கடைகள் அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.</li>
<li style="text-align: justify;">கார், வேன், ஆட்டோ நிறுத்தம் செய்து பொதுமக்கள், பக்தர்கள், ரயில் பயணிகள் இணைந்து தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தப்படும்.</li>
</ul>
<p style="text-align: justify;">ரயில் பயணிகள் நல சங்கத்தின் இந்த எச்சரிக்கை, ரயில்வே நிர்வாகத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், வைத்தீஸ்வரன்கோயில் மற்றும் சீர்காழி பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும்.</p>