தங்கம் விலை எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?: ஆனந்த் சீனிவாசன் விளக்கம்

14 hours ago
ARTICLE AD BOX

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை உயர்வுக்கு சர்வதேச காரணிகளையும், எதிர்கால கணிப்புகளையும் விளக்கியுள்ளார்.

Anand Srinivasan predictions

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.66,000 ஐத் தாண்டியுள்ளது. தங்கத்தின் விலை இப்படி நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவதால் பெரும்பாலான மக்கள் தங்கம் வாங்க முடியாத ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை உயர்வுக்கான காரணங்களை விளக்கியுள்ளார். சர்வதேச அளவிலான காரணிகள் தங்கத்தின் விலையை எப்படிப் பாதிக்கின்றன, எதிர்காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Trump effect on gold price

அமெரிக்காவில் தங்கத்தின் விலை நிலையாக $3,000க்கு மேல் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் ஒராண்டில் அது $3,500 வரை செல்லும். இதனால், 22 கேரட் தங்கம் ரூ.9,000க்கு அருகில் வரலாம், 24 கேரட் தங்கம் ரூ.10,000யை அடையலாம். நாம் கணித்தது நடைமுறையாகும் போலத் தோன்றுகிறது. ஆனால், இது 12 மாதங்களில் நடக்குமா அல்லது 24 மாதங்களில் நிகழுமா என்பதே முக்கியமான கேள்வியாக இருக்கிறது.  

Gold price in India

தங்கத்தின் விலை முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்படிப் செயல்படுகிறார் என்பதிலேயே பாதி சார்ந்திருக்கிறது. "நாம் வாழ்க டிரம்ப்" எனவே சொல்ல வேண்டிய நிலை! அமெரிக்க முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸும் எதிர்வரும் பொருளாதார மந்தநிலையை முன்னறிவித்துள்ளார். அவர் கூறுவதுபடி, அமெரிக்கா அந்த சிக்கலிலிருந்து மீள முடியாது.  

Anand Srinivasan on Gold Price

"அமெரிக்காவை முன்னணி நாடாக மாற்றுவேன்" என டிரம்ப் பதவி ஏற்றார். ஆனால், தற்போதைய சூழலில் அவர் அமெரிக்காவை மந்தநிலைக்கு தள்ளுவார் போலவே தெரிகிறது. இதனால், தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து உச்சத்தைத் தொடும். இந்திய பங்குச் சந்தையும் அதனால் பாதிக்கப்படும் என்கிறார். வெள்ளியின் விலை கூட உயரும், ஆனால், அதில் முதலீடு செய்ய நான் விரும்பவில்லை, ஏனென்றால் அதை உடனடியாக பணமாக்க முடியாது. வெள்ளி ஒரு முழுமையான வணிக உலோகம், ஆனால் தங்கம் அதன் உயர்வை தொடரும்.

Anand Srinivasan on Investing in Gold

மற்றொரு வீடியோவில், 2016-2017ல் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் தற்போது பெரும் லாபம் அடைந்துள்ளதாக அவர் கூறுகிறார். அப்போது ஒரு கிராம் ரூ.2,943, தற்போது ரூ.8,624 என, சுமார் 193% லாபம். எதிர்காலத்தில் சூழல் மோசமாகலாம், எனவே மத்திய அரசு தங்கள் நிலைப்பாட்டை மாற்ற வாய்ப்பு அதிகம்.  

Anand Srinivasan

2019-2020ல் வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களை முன்கூட்டியே சரண்டர் செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கட்டாயமல்ல, விருப்பமுள்ளவர்கள் தங்கள் பத்திரங்களை மாற்றிக் கொள்ளலாம். 2024 வரை அரசு தங்கப் பத்திரங்களை வெளியிட்டுள்ளது, ஆனால் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால், நஷ்டமும் அதிகரிக்கும். தங்கம் தினசரி புதிய சாதனைகளை படைத்துக் கொண்டே செல்கிறது.

Read Entire Article