டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ் நியமனம்

1 day ago
ARTICLE AD BOX

Published : 18 Mar 2025 07:31 AM
Last Updated : 18 Mar 2025 07:31 AM

டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ் நியமனம்

<?php // } ?>

புதுடெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 18-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டரான அக்சர் படேல், கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது துணை கேப்டனாக தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 40 வயதான, டு பிளெஸ்ஸிஸ் கடந்த 3 சீசன்களிலும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.

ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்துக்கு முன்னதாக அந்த அணி அவரை விடுவித்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் டெல்லி அணி டு பிளெஸ்ஸிஸ்-ஐ ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. கடந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியிருந்த டெல்லி கேபிடல்ஸ் இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தில் வரும் 24-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் மோதுகிறது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article