சென்கோ கோல்ட் சென்கோ கோல்ட் லிமிடெட் நிறுவனம் தங்க நகை சில்லரை விற்பனையாளர். நாடு முழுவதும் 165க்கும் மேற்பட்ட கடைகளை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய சங்கிலித் தொடர் நகை சில்லரை விற்பனை நிறுவனமாகும்.
கடந்த 4 வர்த்தக தினங்களில் இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டதால் இப்பங்கின் மீது முதலீட்டாளர்கள் பார்வை திரும்பியுள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்து வரும் வேளையில் இப்பங்கில் முதலீடு செய்யலாமா என்ற கேள்விக்கு பிரபல பங்குச் சந்தை நிபுணர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

சென்கோ கோல்ட் நிறுவனம் 2024 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.33.48 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 69 சதவீதம் குறைவாகும். நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதது மற்றும் பங்குச் சந்தைகளின் பரந்த சரிவு போன்ற காரணங்களால் இப்பங்கின் விலை அதன் 52 வார உச்ச விலையிலிருந்து படிப்படியாக சரிவு கண்டது.
கடந்த 17ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே சென்கோ கோல்ட் நிறுவன பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.227.70ஆக சரிந்தது. ஆனால் அதற்கு அடுத்தநாளே பங்குச் சந்தையில் சென்கோ கோல்ட் பங்கு விலை அப்பர் சர்க்கியூட் அடித்தது.
கடந்த செவ்வாய் முதல் நேற்று வரையிலான கடந்த 4 வர்த்தக தினங்களில் இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டது. தற்போது இப்பங்கின் விலை அதன் 52 வார குறைந்தபட்ச விலையை காட்டிலும் 27 சதவீதம் அதிகமாக உள்ளது. தொடர்ச்சியாக 4 தினங்கள் இப்பங்கின் விலை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு இப்பங்கினை வாங்குமோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்கோ கோல்ட் பங்கு குறித்து லட்சுமிஸ்ரீ இன்வெஸ்ட்மென்ட் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி தலைவர் அன்ஷுல் ஜெயின் கூறுகையில், ஐந்து மாதங்களில் இப்பங்கின் விலை 70 சதவீதம் சரிவு கண்டது. தற்போது இப்பங்கு டெட் கேட் பவுன்ஸூக்கு அதாவது குறைந்து வரும் பங்கின் விலையில் சிறிய மீட்சிக்கு தயாராகி வருகிறது.
தற்போது இப்பங்கின் விலை ரூ.300 எட்ட முயற்சிக்கிறது. ஒரு வேளை இந்த விலையை தாண்டில் இப்பங்கின் விலை ரூ.379 நோக்கி செல்லக்கூடும். இதனால் ரூ.375-380 வரை ஒரு பெரிய ரெசிஸ்டன்ஸ் பகுதியாக இருக்கும். குறுகிய கால ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், பரந்த போக்கில் இப்பங்கு பலவீனமாகவே உள்ளது. ரெசிஸ்டன்ஸை நெருங்க நெருங்க விற்பனை அழுத்தம் ஏற்பட்டு மீண்டும் பங்கு விலை சரிய தொடங்கலாம் என்று தெரிவித்தார்.
ஃபினோகிராட் டெக்னாலஜியின் நிறுவனரும் இயக்குனருமான கவுரவ் கோயல் கூறுகையில், சென்கோ கோல்ட் நிறுவனத்தின் அடிப்படைகள் நியாயமானதாக இருந்தாலும், முதலீட்டாளர்கள் பங்குகளில் புதிய முதலீட்டை மேற்கொள்வதற்கு முன்பு வரவிருக்கும் காலாண்டு முடிவுகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.