ARTICLE AD BOX
Published : 27 Feb 2025 11:40 PM
Last Updated : 27 Feb 2025 11:40 PM
டி-ஷர்ட்டில் மோர்ஸ் குறியீடு: ஓய்வு குறித்து தோனி சூசகம்

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கு தயாராகும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பங்கேற்கும் 10 நாள் பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. இதில் தோனியும் பங்கேற்றுள்ளார்.
இதற்காக புதன்கிழமை அன்று அவர் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியேறிய போது அவர் அணிந்திருந்த கருப்பு நிற டி-ஷர்ட்டில் இடம்பெற்றிருந்த மோர்ஸ் குறியீடு கவனம் பெற்றுள்ளது. ‘One Last Time’ என்பதை அதை டீ-கோட் செய்ததன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
இது சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆனது. தோனி தனது ஐபிஎல் கிரிக்கெட் ஓய்வை தான் இப்படி சூசகமாக குறியீடு மூலம் வெளிப்படுத்தி உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 264 போட்டிகளில் 43 வயதாகும் தோனி விளையாடி உள்ளார். அதன் மூலம் 5,243 ரன்களை சேர்த்துள்ளார். ஐந்து முறை அவரது தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 23-ம் தேதி மும்பை அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த சீசனுக்கு தயாராகும் விதமாக சிஎஸ்கே அணி வீரர்கள் 10 நாட்கள் கொண்ட பயிற்சி முகாமை தொடங்கி உள்ளனர். இந்த பயிற்சி முகாம் சென்னை நாவலூரில் உள்ள சிஎஸ்கே உயர்மட்ட செயல் திறன் மையத்தில் இன்று (27-ம் தேதி) தொடங்கி உள்ளது. இதில் தோனியுடன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி, ஆந்த்ரே சித்தார்த், பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ராமகிருஷ்ண கோஷ், வேகப்பந்து வீச்சாளர்கள் கலீல் அகமது, கமலேஷ் நாகர்கோட்டி, முகேஷ் சவுத்ரி, அன்சுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
Thala landed in Chennai
The world felt the goosebumps #DenComing #WhistlePodu #Yellove pic.twitter.com/4SXVsYXBZC
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- சாம்சங் கேலக்சி எம்16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
- வெற்றியின்றி வெளியேறிய பாகிஸ்தான் @ சாம்பியன்ஸ் டிராபி
- வட மாநிலங்களில் மலியும் போலி ஐஎஸ்ஓ, ஸ்டார் முத்திரை - கோவை பம்ப்செட் நிறுவனங்களுக்கு நெருக்கடி!
- OTT Pick: நெட்ஃப்ளிக்ஸில் சாதித்த ‘லக்கி பாஸ்கர்’ - ஒரு விரைவுப் பார்வை